கொரோனா அச்சம் காரணமாக நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரையுலகினர் சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நோய்த்தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பரவும் கொரோனா

இந்த நிலையில் திரையுலகினர் சிலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மாரடைப்பால் உயிரிந்த பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல். ராகவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமையில் நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேனி புறப்பட்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதேபோல், நடிகர் கமல்ஹாசன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here