சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்பு கொண்ட நபர், வேறு எந்த விவரங்களையும் சொல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

தீவிர சோதனை

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். அவரது வீடு மட்டுமின்றி அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை

இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here