தனது அடுத்த படம் நிச்சயம் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என நடிகை ரம்யா கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரையுலகில் சாதனை

சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப் தொடர்கள் என்று பிசியாக இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இந்திய படவுலகில் ஆரம்ப கட்டத்திலிந்து பல பிரச்சனைகளை சமாளித்து வந்த ரம்யா கிருஷ்ணன், தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கட்டமைத்து வைத்துள்ளார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து அசத்திய ரம்யா கிருஷ்ணனை யாராலும் மறக்க முடியாது.

மக்களிடம் பேசப்படவில்லை

கல்நாயக், கிரிமினல் உள்ளிட்ட சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், பாலிவுட்டில் அதிகப் படங்களில் நடிக்காதது பற்றி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்; பாலிவுட்டிலிருந்து நான் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடித்து வெளியான சில ஹிந்திப் படங்கள் மக்களிடம் சரியாக பேசப்படாததால், அதில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. தென்னிந்தியப் படங்களில் எனக்கு ஏற்றாற்போல் கதை அமைந்ததால் நான் தீவிரமாக நடித்து வந்தேன்.

இன்னொரு பாகுபலி!

தற்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறேன். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படம் என் ரசிகர்களுக்கு இன்னொரு பாகுபலியாக இருக்கும் என நம்புகிறேன். ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்”. இவ்வாறு ரம்யா கிருருஷ்ணன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here