உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள காஷிராம் திறந்தவெளி பூங்காவில் ஏராளமான உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இந்த கருவிகளில் ஒன்று, இரவு நேரத்தில் தானாக இயங்குவதாகவும், பேய் உடற்பயிற்சி செய்வதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த கருவியை சோதனை செய்தபோது, உடற்பயிற்சி செய்த பிறகும் அந்தக் கருவி 5 நிமிடங்களுக்கு தானாகவே இயங்கும் என்பது தெரிந்தது. விஷமிகள் சிலர் பேய் உடற்பயிற்சி செய்வதாக வதந்தியை பரப்பியதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here