கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4 கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூன் 1ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்த நாளுக்கு கொடுக்ககூடிய பங்களிப்பை, கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here