தமிழில் வளர்ந்து வரும் இளம்நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர் ஒருவருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அழகாக இருப்பதாகவும், அவருக்காக சாகவும் தயார் என்றும் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கமென்ட் பதிவு செய்தார். இதனை கண்டு அதிர்ந்து போன ஐஸ்வர்யா, அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில்; வாழ்க்கை என்பது யாருக்காகவும் மரணிப்பதற்கு அல்ல. இந்த மாதிரி வார்த்தையை மறுபடியும் யூஸ் பன்னாதீங்க. இப்படி ஒரு ரசிகர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கனும் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here