தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரபல டிவி நடிகை சிம்ரன் சச்தேவா பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

டிவி நடிகை

இந்தி டிவி நடிகை சிம்ரன் சச்தேவா, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சோட்டி சர்தார்னி என்ற தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த மான்சி சர்மா, உடல்நலம் குன்றியதால் அதிலிருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக சிம்ரன் சச்தேவாவை நடிக்க வைத்தனர். இவர் ஏற்கனவே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் நஷ்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிக சம்பளம் வாங்கிய நடிகர், நடிகைகளை தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்துக்கு சம்மதிப்பவர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

பரபரப்பு புகார்

அந்த வகையில் சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவிதம் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்து தொடரில் இருந்து அவர் விலகி விட்டார். இதுகுறித்து சிம்ரன் சச்தேவா கூறும்போது, “தொடரில் நடிக்க ஏற்கனவே சம்பளத்தை ஒழுங்காக தரவில்லை. இப்போது 40 சதவீதம் சம்பளத்தை குறைக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் தவறாக நடக்க முயன்றார். மரியாதை இல்லாமலும் நடத்தினார். இதனால் அந்த தொடரில் இருந்து விலகினேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here