அமெரிக்காவில் கடந்த 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீசார், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினர். இதில், ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. வெள்ளை மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அதிபர் டிரம்ப் பதுங்கு குழிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. போராட்டத்தை பயன்படுத்திக் கொண்ட சிலர் அங்குள்ள கடைகளில் கொள்ளையடித்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக சிகாகோவில் வசிக்கும் முருகேஷ் littletalks plus யூடியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here