நடிகர் மனோ பாலாவின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் வடிவேலு பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சிங்கமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வடிவேலு, சிங்கமுத்து மற்றும் மனோ பாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் மனோ பாலா, வடிவேலுவுக்கு மன உளைச்சல் தரும் எண்ணமோ, நோக்கமோ எனக்கு கிடையாது. வடிவேலு போன்ற ஒரு நல்ல நண்பரை இழக்க நான் தயாராக இல்லை. வடிவேலு என்னை மன்னிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here