தன்னைப் பற்றி தரக்குறைவாக் பேசிய நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு ஒன்றை அளித்துள்ளார்.

பிரச்சனை

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவிற்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. நீதிமன்றம் வரை இவர்கள் பிரச்சனை சென்றதால், இருவரும் ஒன்றாக இணைந்து படங்களில் நடிப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கூட ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர்.

யூடியூபில் பேட்டி

இதனிடையே, சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், சிங்கமுத்து, மனோபாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சங்கத்திற்கு வடிவேலு கடந்த மாதம் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வடிவேலு புகார்

அந்த கடிதத்தில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

மன உளைச்சல்

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here