புதிதாக உருவாக உள்ள முருகனைப் பற்றிய பக்தி படத்திற்கு ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் ஆகின்றனர்.

பக்தி படம்

தமிழில் ‘தொட்ரா’ என்ற படத்தை இயக்கியவர் மதுராஜ். இவர் அடுத்ததாக ‘அரோகரா’ என்ற பக்திப் படத்தை இயக்க உள்ளார். முருகனை பற்றிய இந்தப் படம் குறித்து மதுராஜ் பேசுகையில், தமிழில் பக்திப் படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

பக்தர்களே தயாரிப்பாளர்கள்

தற்போது பக்தி படங்கள் எடுத்தால் யாரும் தயாரிக்க முன்வருவதில்லை. அதனால் பக்தர்களையே தயாரிப்பாளர்களாக்கி முருகன் பக்தி படம் எடுக்க முடிவு செய்தேன். இதில் ஒரு லட்சம் முருக பக்தர்கள் தங்களால் முடிந்த பணத்தை போட்டு தயாரிப்பாளர்கள் ஆகிறார்கள்.

சிலை குறித்த ரகசியம்

பக்தி படம் என்றாலும் அதில் திகிலும் இருக்கும். முருகப் பெருமானின் 6 படைவீடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. பழனி முருகனின் நவபாசன சிலை பற்றிய ரகசியமும் இப்படத்தில் இருக்கும். இவ்வாறு மதுராஜ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here