புல்வாமா தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த முயற்சி பாதுகாப்பு துறையின் சமயோஜித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. வெடி பொருட்கள் நிரப்பட்ட கார் ஒன்றை பயங்கரவாதிகள் ஓட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்புப் படையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே காரை ஓட்டி வந்த நபர், பாதுகாப்புப் படை வீரர்களை பார்த்ததும் தப்பியோடினார். பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது வெடிபொருட்கள் நிரப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சமயோஜிதமாக யோசித்த வீரர்கள், காருக்குள் வைத்தே பாதுகாப்பாக வெடிபொருட்களை வெடிக்கச் சென்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here