கொரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக நடிகை நித்யா மேனன் தான் உபயோகித்த உடைகளை ஏலம் விடும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

உடைகள் ஏலம்

தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், 24 போன்ற படங்களில் நடித்தவர் நித்யா மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர், மலையாள திரையுலகிலும் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன், அதில் தான் அணிந்த உடையை முதல் கட்டமாக ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார். 

பண உதவி

இதுபற்றி நித்யா மேனன் கூறுகையில்; நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100 சதவீதமும் அறக்கட்டளைக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது.

ஸ்பெஷல் டிசைன்

இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெ‌ஷலாக செய்யப்பட்டது. பே‌ஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது. இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here