சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலியல் கொடுமை

தமிழ்த் திரைப்படங்களில் பல கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை இயக்கியுள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அவர் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

மனதில் ரணம்

இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு அனுபவத்தை இப்போது நினைக்கும்போதும் மனது வலிக்கிறது. அப்பா வயதில் இருக்கும் ஒருவர் என் முன்னால் அந்தரங்கத்தை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அது எனக்கு புரியவில்லை. வளர வளர புரிய ஆரம்பித்ததும் எவ்வளவு கேவலமான செயல் என்று மனதில் ரணம் ஏற்பட்டது.

பெண்களுக்கு எதிரான கொடுமை

அதேபோல் எனது மகள் பள்ளியில் இருந்து வரும்போது லிப்டில் ஒருவன் ஆபாசமாக நின்றுள்ளான். சிசிடிவி கேமராவில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். இப்படி பல பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here