ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடி, எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பல புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாராகி வருகின்றன. ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வருகிற 29-ந் தேதியும், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ திரைப்படம் அடுத்த மாதம் 19-ந் தேதியும் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரண்டு பெரிய நடிகைகளின் படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓடிடியில் ‘நிசப்தம்’?

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இணைய தளத்தில் வெளியிட படக்குழு தயாராகியுள்ளது. இப்படத்தில் மாதவன், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழு பேச்சுவார்த்தை

ஹேமந்த் மதுக்கூர் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஜனவரி மாதம் வெளியாக இருந்த ‘நிசப்தம்’ திரைப்படம் ஒருசில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதனால் ‘நிசப்தம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here