மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தில் மேலும் ஒரு நடிகை நடிக்க உள்ளார்.

‘தலைவி’

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். படப்பிடிப்பை விரைவாக முடித்து அடுத்த மாதம் 26-ந்தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முக்கிய வேடம்

கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீயும் ‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்து உள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய பாக்யஸ்ரீ, தலைவி படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கங்கனா ரணாவத்துக்கும், எனக்கும் அதிகமான காட்சிகள் உள்ளன. படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

சசிகலா கதாபாத்திரமா?

பாக்யஸ்ரீ சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பாக்யஸ்ரீ இந்தியில் சல்மான்கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதைதொடர்ந்து, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here