நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தால் இந்திப் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி. தமிழில் ‘பருத்திவீரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது தெலுங்கில் ராணாவுடன், ‘1992’ படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.

வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன்

இந்த நிலையில், நடிகை பிரியாமணி சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள், அவர்கள் படத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து வாய்ப்பு கொடுத்தால், அதை ஏற்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

திருப்தி அடைகிறேன்

இந்தி திரைத்துறையில் எனது வாழ்க்கையை விரிவுபடுத்த நான் எப்போதும் எதிர்நோக்குகிறேன். இதுவரை நான் செய்து வரும் வேலைகளை நினைத்து திருப்தி அடைகிறேன் என பிரியாமணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here