உலக செவிலியர் தினம்

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவு கூறுகிறது. ஜனவரி 1974-ல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

நிகழ்வுகள்

1656 – ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.

1689 – பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.

1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.

1922 – 20 டன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

1942 – வதை முகாமின் நச்சு வாயு அறையில் அடைக்கப்பட்டு இருந்த 1500 யூதர்கள் உயிரிழந்தனர்.

1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

1952 – காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.

1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here