சந்தானம் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக செய்திகள் பரவியது தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆதரவு, எதிர்ப்பு

புதிய திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களின் எந்த ஒரு படத்தையும் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஓடிடியில் ரிலீஸ்?

இந்த நிலையில், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான சர்வர் சுந்தரம் திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவின.

இயக்குனர் விளக்கம்

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ் திரைப்படங்கள் சரியாக மதிப்பிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. இன்னமும் ஓடிடி தளங்களுக்கு கோலிவுட் என்றால் என்ன என்று புரியவில்லை. ‘சர்வர் சுந்தரம்’ படம் தியேட்டரில் தான் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here