ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்களை தொடர்ந்து ‘ஸ்ரீ கிருஷ்ணா’ தொடரை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

இதிகாச தொடர்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.  இந்த நேரத்தில் தொலைக்காட்சிகளில் பொழுதை கழித்து வரும் மக்களுக்காக, தூர்தர்ஷன் தொலைக்காட்சி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்களை மீண்டும் ஒளிபரப்பு செய்து வருகிறது.

மக்களிடம் வரவேற்பு

இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பட்ட ‘ஸ்ரீ கிருஷ்ணா’ தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here