ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும் இந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால் மிகவும் சோர்வடைவதாகவும், இதனால் மற்ற இந்திய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here