தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நினைவிடத்தில் நாள்தோறும் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்த் மரணமடைந்த போது வெளிநாட்டில் இருந்த நடிகர் கார்த்தி, வீடு திரும்பியதும் இன்று தனது தந்தை சிவக்குமாருடன் சென்று விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய கார்த்தி, கேப்டனின் இறுதிச்சடங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது தனது வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாகவே இருக்கும் எனவும் நடிகர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி கேப்டனின் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here