மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பட்டம் பெற்ற மாணவர்கள்

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது. இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனரான தெய்வத்திரு ஏ.என். ராதாகிருஷ்ணன் அவர்களின் தொலைநோக்கு பார்வை தான் MAHER இன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அண்ணாரை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்திய பின்னர், பட்டமளிப்பு விழா தொடங்கியது. MAHER இன் இடைக்கால வேந்தரான திருமதி. கோமதி கிருஷ்ணன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

பயணம், பங்களிப்பு

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் ENT ஆராய்ச்சி அறக்கடளையின் நிர்வாக இயக்குனரும், பேராசிரியருமான பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஷ்வரன் தலைமை வகித்தார்கள். MAHER இன் நிர்வாக வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தனது வரவேற்பு உரையில், 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டத்தில் இருந்து இன்று வரை திகழும் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற பயணத்தைப் பற்றி குறிப்பிட்டார். மேலும் தேசிய கல்வி கொள்கைகளோடு ஒன்றியிருக்கும் MAHER இன் கல்வி கொள்கைகளைப் பற்றியும், உயர்தர கல்வி வழங்குவதில் MAHER இன் அற்பணிப்பு பற்றியும் விக்சித் பாரத் 2047 நோக்கத்தை செயல்படுத்த நிறுவனத்தின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆண்டறிக்கை

MAHER இன் துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ். நீலகண்டன் அவர்கள் இந்நிறுவனத்தின் அங்கீகாரங்கள், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆசிரியர் மேம்பாட்டிற்காக்வும், மாணவர் நலனிற்காகவும் எடுக்கப்படும் முனைவுகள், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் நடைபெற்ற வளர்ச்சிகள் போன்ற முக்கிய சாதனைகளை கொண்ட ஆண்டறிக்கையை வழங்கினார்.

நிறைவான வாழ்க்கை

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினரான பத்மஸ்ரீ மோகன் காமேஷ்வரன் அவர்களின் உரையும் விழாவில் இடம்பெற்றது. அவர், MAHER இன் தொகுதி கல்லூரிகளின் சிறந்த சாதனைப் பதிவுகளையும், செயல்பாடுகளையும், அங்கீகார விருதுகளையும் பாராட்டினார். புதிய பட்டதாரிகளுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து எல்லா மாணவர்களுக்கும் நிறைவான வாழ்க்கை அமையும்படி வாழ்த்தினார்.

சாதனையாளர்கள்

விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை – முதுகலை மற்றும் 45 Phd மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, அதேநேரத்தில் MAHER இன் மதிப்பிற்குரிய 7 முன்னாள் மாணவர்கள் “சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது”களைப் பெற்றனர். கூடுதலாக உட்சுரப்பியல் மருத்துவரும் (Endocrinologist) மற்றும் பொது மருத்துவருமான டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் Honoris Causa கெளரவ விருது தரப்பட்டது. மேலும், டாக்டர் நிமல் ராகவன் சுற்றுச்சூழலுக்கான தனது அற்ப்பணிப்பு சேவைக்காக சமூகப் பொறுப்பு விருதைப் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here