தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிப்பு

சில தினங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நம்புகிறோம்

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here