நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சை

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை திரிஷா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரிஷா உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

மனு தாக்கல்

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு வியாழக்கிழமை (நவ.,23) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here