நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று (நவ., 23) நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here