உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா.

அசத்தல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார். இந்தியில் நடிகர் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பார்க்காத காதல்

இந்நிலையில், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘தி கேர்ள்பிரண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ராஷ்மிகா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது. இதுவரை பார்க்காத அல்லது கேள்விப்பட்டிருக்காத சில காதல் கதைகளும் இருக்கின்றன. ‘தி கேர்ள்பிரண்ட்’ அப்படி ஒரு கதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here