மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82.

ஆன்மீக குரு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கியவர். மேல் மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். அவரது ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

சோகம்

இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக பங்காரு அடிகளார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை மாரடைப்பால் அவர் காலமானார். மறைந்த பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், ஜிபி செந்தில், ஜிபி அன்பழகன் என்ற மகன்களும் உள்ளனர். பங்காரு அடிகளார் மறைந்த செய்தி அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here