குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

திருவிழாக்கோலம்

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதற்காக ஒரு லட்சத்து 32 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. கிரிக்கெட்டை காண்பதற்காக குவிந்த ரசிகர்களால் அகமதாபாத் நகரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது போல் காட்சி அளித்தது. இந்திய அணியின் ஜெர்சி அணிந்து திரும்பும் இடமெல்லாம் நீல மயமாக காட்சியாக இருந்தது.

இந்தியா பவுலிங்

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here