சின்னத்திரை நடிகை பாவனி மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை பாவனி. இவர் ரெட்டை வால் குருவி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவனி, சக போட்டியாளரான அமீருடன் காதல் ஏற்பட்டதால் அவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்த பாவனி, தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பாவனி நடிக்க இருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here