பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து அவரது முன்னாள் காதலர் சில க்ருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

நேஷனல் க்ரஷ்

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார். 

காதல் – பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் க்ரிக் பார்ட்டி படத்தில் நடித்த போது, அவரோடு நடித்த நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் மலர்ந்தது. 2017ல் இவர்களின் நிச்சியதார்த்தம் மிகவும் விமர்சியாக நடைபெற்றது. எனினும், 2018ல் காரணங்கள் எதுவுமே குறிப்பிடாமல் இந்த ஜோடி அவர்களின் நிச்சிய உறவிலிருந்து விலகினார். அவர்களின் இந்த பிரிவு கன்னட சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் நடிகை ராஷ்மிகா.

அவர் தகுதியானவர்

இந்நிலையில், நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் கொடுத்திருந்த நேர்காணலில் ராஷ்மிகாவை பற்றி கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பேசிய ரக்ஷித், தானும் ராஷ்மிகாவும் இப்போதும் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவ்வப்போது பேசிக்கொள்வதாக கூறினார். மேலும், ராஷ்மிகா சினிமா துறையில் சாதிக்க விரும்பியதாகவும், அதனை நோக்கி சரியான பாதையில் அவர் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல், ராஷ்மிகா அடைய நினைக்கும் இடத்திற்கு அவர் மிகவும் தகுதியானவர் என தெரிவித்துள்ளார். மேலும், ராஷ்மிகா செய்திருக்கும் சாதனைகளுக்காக அவரை நாம் பாராட்டவேண்டும் எனவும் அவர் கூறினார். ரக்ஷித் ஷெட்டியின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here