மும்பையில் டபுள் டக்கர் பேருந்து நேற்றுடன் தனது சேவையை முடித்துக் கொண்ட நிலையில் பயணிகள் சோகத்துடன் அந்த பேருந்துகளை வழி அனுப்பி வைத்தனர்.

டபுள் டக்கர்

மும்பையின் அடையாளமாக திகழ்ந்தவைகளில் ஒன்று டபுள் டக்கர் பேருந்து. இந்த பேருந்தில் பயணம் செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். 

சோகம்

இந்த நிலையில் மும்பை அந்தேரியில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டது. பேருந்தின் கடைசி நாளான நேற்று பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் திரண்டு, அந்த பேருந்துகளை சோகத்துடன் வழிஅனுப்பி வைத்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here