பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை வரவேற்றுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் கல்விக்கு ஏற்படும் தடைகள் எல்லாத்தையும் உடைக்கணும் என்று கூறியுள்ளார்.

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு அளிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

வரவேற்பு

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், சமூக ஆர்வர்லர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவை கொடுக்கிறது வரவேற்க வேண்டிய விஷயம். ஊட்டச்சத்து குறைப்பாடு குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை. கல்விக்கு ஏற்படும் தடைகள் எல்லாத்தையும் உடைக்கணும். இதுபோன்ற முன்னெடுப்புகளைக் கொண்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாருக்கு நன்றி!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here