ஸ்டார் விஜய்யின் மற்றொரு தொடரான ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

புத்தம் புதிய தொடர்

பார்வையாளர்களுக்கு வசீகரிக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடர் வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

திருப்பங்கள்

இந்த புத்தம் புதிய தொடர் சாமியப்பன் குடும்பத்தைச் சுற்றி நடப்பதே கதையம்சாமாக அமைந்துள்ளது. சாமியப்பனின் வளர்ப்பு மகள் ரேணுகா. ரேணுகா ஒரு அன்பான சுறுசுறுப்பான பெண், அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் மற்றும் பெரிய குடும்பம் கொண்ட தனது முழு குடும்பத்தையும் அன்பாகவும், அரவணைப்பாகவும் வைப்பதில் கவனமாக இருப்பாள்.  குடும்பத்தில் சவால்கள் மற்றும் பிரிவினைகள் ஏற்பட்டாலும், தன்னால் முடிந்த அளவு ஒற்றுமையாக இருக்க பாடுபடுவாள். ரேணுகா தனது சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், தான் ஒரு வழக்கறிஞராக பட்டப்படிப்பை படிக்க  ஆசைப்படுகிறாரள். இதன் மூலம் அவளுக்குத் துணையாக நிற்கிறார் தந்தை சாமியப்பன். அர்ஜுன் மற்றும் சண்முகம் இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், அவர்கள் அவளிடம் அன்பையும், பாசத்தையும் கொண்டுள்ளனர். பல சுவையான திருப்பங்களைக் கொண்டுள்ள இந்த தொடரின் கதையில், பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றிவிடுவார் என்றால் அது மிகையாகாது.

கண்கவர் குடும்ப கதை

‘கிழக்கு வாசல்’ தொடரில் ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சண்முகமாக வெங்கட் ரங்கநாதன், பார்வதியாக அஷ்வினி, தயாளனாக ஆனந்த் பாபு, அர்ஜூனாக தினேஷ் கோபாலசாமி, நடேசனாக அருண், மாயாவாக ரோஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு கண்கவர் குடும்ப கதை கொண்ட ‘கிழக்கு வாசல்’ தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here