திருவண்ணாமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை அமைச்சர் எ.வ.வேலு மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

சாமி தரிசனம்

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை சென்றார். ஜூலை 1 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

திடீர் சந்திப்பு

இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திரைத்துறை, அரசியல் சூழல் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் எ.வ.வேலு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here