‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இடம்பெற்ற “அலைகடல்” பாடலை பாடிய குத் வித் கோமாளி சிவாங்கியை பிரபல பின்னணி பாடகி அண்டாரா நாண்டி பாராட்டியுள்ளார்.

மெகா ஹிட்

மணிரத்னம இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் அள்ளியது. அதனைதொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாடகி பாராட்டு

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற “அலைகடல்” பாடலை “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டி, சிவாங்கியின் வீடியோவை பகிர்ந்து, “இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் அழகாக பாடியிருக்கிறாய்” என்று பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான ஹாஷ்டாக் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here