தனது உதவியாளர்களுக்கு தங்கக் காசு பரிசளித்து அன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை ஷ்ரேயா ரெட்டி.

திறமையான நடிகை

விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷ்ரேயா ரெட்டி. அதன்பின்பு காஞ்சிவரம், வெயில் உள்ளிட்ட சில படங்களில் துணை காதாபாத்திரங்களில் நடித்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஷ்ரேயா ரெட்டி, பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

இன்ப அதிர்ச்சி

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘சுழல்’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தது வருகிறது. தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தில் ஷ்ரேயா நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், ‘சலார்’ படத்தில் தனக்கு உதவியாளர்களாக பணியாற்றிவர்களுக்கு தங்கக் காசு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை ஷ்ரேயா ரெட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here