வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என நடிகர் விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் பேச்சு

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசைகளையும் வழங்கினார். அப்போது பேசிய விஜய், “காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட வேண்டாமென உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். நீங்க தான் நாளைய வாக்காளர்கள், காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள். நல்ல தலைவரை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

உதயநிதி கருத்து

நடிகரின் விஜய்யின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை. பாஜகவின் குரலாகவே ஆளுநர் பேசி வருகிறார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here