முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி இயக்குநரும் கணவருமான விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸை கண்டு கண்கலங்கிவிட்டார் நடிகை நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டார்

ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நயன்தாரா, சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன் என்று பல ஹிட் படங்களை கொடுத்தார். நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

திருமணம்

விக்கேனஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த கோடி, இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருவரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சர்ப்ரைஸ்

இந்நிலையில், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை வீட்டில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் இருந்து ‘ஒரு கணம் ஒரு போதும்’ பாடலை புல்லாங்குழலில் வாசித்தார். இதை கண்டு சர்ப்ரைஸான நயன்தாரா ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழ தொடங்கிவிட்டார். இதுதொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here