கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் சென்னையில் இன்று திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்

கோடை காலம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. தலைநகரான சென்னையில் வெயில் கடுமையாக வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டில் வீசிய நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்தனர்.

கனமழை

இந்நிலையில், இன்ப அதிர்ச்சியாக தற்போது சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே திடீரென பெய்து வரும் கனமழை பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here