ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது வெற்றியை கொண்டாடிய புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

வைரல் வீடியோ

இந்நிலையில், சிஎஸ்கே கோப்பையை வென்றதை சென்னை அணி வீரர்கள் பேருந்து மற்றும் ஓய்வு அறையில் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here