திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.

பல படங்கள் கைவசம்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்து வசூலை வாரி குவித்தது. தற்போது தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தமிழில் மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றது. இதைதொடர்ந்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி.

திணறிய கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டு பேட்டரி கார் மூலம் அவரது கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here