பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதனால், இதன் மூன்றாம் பாகத்தை பற்றி விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

2 பாகங்கள் வெற்றி

2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.இந்த படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காவியா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதாரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆனால் கடந்த வீக் எண்டில் இப்படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் குவிந்தது. ஃபேமிலி ஆடியன்ஸ்சுக்கு இந்த படம் பிடித்துள்ளதாக கருத்துக்கள் வந்துள்ளது.

வசூல் வேட்டை

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பல தரப்பிலும் பலமான எதிர்ப்பு கிளம்பிய போதிலும், பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைக் காட்டிலும் ஆந்திராவில் பிச்சைக்காரன் 2 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிச்சைக்காரன் 3

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியால் மூன்றாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பிச்சைக்காரன் 3, இரண்டாம் பாகத்தைப் போல ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பிச்சைக்காரன் 3 2025ல் வெளியாகும் என்றும் அந்த பேட்டியில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.பிச்சைக்காரன் முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் முதல் பாகத்தில் முழுக்க முழுக்க அம்மா சென்டிமென்ட் ஆகவே இருந்தது. அது மட்டும் இல்லாமல், ஹீரோ காதலியை திருமணம் செய்து கொண்டான். அம்மாவின் உடல்நிலையும் சரியாக விட்டது. அதனால் அதை இரண்டாம் பாகமாக தொடர்ச்சியாக கொண்டு வந்தால் மீண்டும் அம்மா சென்டிமென்ட் ஆகவே வரும். அதனால் இரண்டாம் பாகத்தை வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டை வைத்தோம். இந்த படம் மக்களுக்கு பிடித்து உள்ளது. மூன்றாம் பாகம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here