நடிகை சிம்ரன் மகனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள், சிம்ரன் மகன் ரொம்ப வளந்துட்டாரே என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.

முன்னணி நடிகை

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேட்ட, மகான், கேப்டன் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர், வாரணம் ஆயிரம், ராக்கெட்டரி, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் ‘துருவ நட்சத்திரம்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது. தமிழில் மட்டும் 50 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார் சிம்ரன். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளிலும் கலக்கி வந்தார்.

ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண்ஜெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை நடிகை சிம்ரன் தனது மகனுடன் கண்டு ரசித்துள்ளார். மைதானத்தில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் மகன் ரொம்ப வளந்துட்டாரே என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here