நடிப்பு குறித்து நடிகர் விஜய்சேதுபதி தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் என யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்த நடிகை மதுரா கூறியுள்ளார்.

மாடலிங், நடிப்பு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இந்த திரைப்படத்தில் லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தனது இசைக்குழுவுடன் வரும் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மதுரா. ஜெர்மனியில் வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், தமிழில் மேற்படிப்பை முடித்துவிட்டு ஜெர்மன் பிராங்க்பர்ட் தமிழ் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றியவர். பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளவர். ஸ்விட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்திருக்கிறார்.

தமிழில் நடிக்க ஆர்வம்

சில இசை வீடியோக்களில் நடித்ததன் மூலம் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட வாய்ப்பை இவர் பெற்றார். இவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை மதுரா கூறி இருப்பதாவது; “இந்த படம் இலங்கை அகதிகள் பற்றிய கதை என்பதால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பில் எனக்கு நடிப்பு குறித்து விஜய் சேதுபதி டிப்ஸ் கொடுத்தார். நடிகர் விவேக் உடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மேலும் பல தமிழ் படங்களில் நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here