தனது திருமணம் தொடர்பான தகவலை தானே வெளியிடுவேன் எனவும் அதுவரை பொறுமையாக இருங்கள் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

பல படங்கள் கைவசம்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்து வசூலை வாரி குவித்தது. தற்போது தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தமிழில் மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றது. இதைதொடர்ந்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி.

நானே கூறுவேன்

நடிப்பில் பிஸியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷை சுற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும், திருமண வதந்திகளும் வெளியாகி வருகின்றது. சமீபத்தில் கூட இவரது நீண்ட நாள் நண்பருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ் அவரை காதலிப்பதாக தகவல் பரப்பினர். இந்நிலையில் தனது திருமண வதந்தி குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி. அவரது பதிவில்; “இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். அவர் எனது வருங்கால கணவர் இல்லை. என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன். அதுவரை பொறுமையாக இருங்கள்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here