ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

புஷ்பாவிடம் வாக்குவாதம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்கிறது. இந்த தொடரில் இன்றைய எபிசோடில் புஷ்பா மீனாட்சி பெண்களிடம் இந்த மெஸ் இனி என்னுடைய இடம், மீனாட்சி கையெழுத்து போட்டு கொடுத்துட்டா என்று பத்திரத்தை காட்டுகிறார். அதை ஏற்றுக்கொள்ளாத சக்தி, துர்கா, யமுனா, சாந்தா என அனைவரும் புஷ்பாவிடம் வாக்குவாதம் செய்கின்றனர்.

மறுக்கும் சக்தி

மீனாட்சி இல்லாத நேரத்தில் ஏன் இப்படி செய்கிறாய் என்று சாந்தா கேட்கிறார். ஆனால் புஷ்பா மெஸ்சையும் , வீட்டையும் பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனால் பதட்டமடைந்த சக்தி வெற்றிடம் வந்து உடனே மெஸ்சுக்கு போக வேண்டும் வெற்றி சீக்கிரம் கிளம்பு என்று கெஞ்சுகிறார். ஆனால் வெற்றியோ ஏற்கனவே சக்தி திமிராக பேசியதை யோசித்து விட்டு அங்கிருந்து செல்ல மறுக்கிறார். இந்நிலையில் இத்தொடரில் அடுத்த கட்டம் என்ன நடக்கிறது என்பதை இந்த தொடரின் அடுத்த எபிசோடில் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here