பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

கனவு கன்னி கீர்த்தி

தெலுங்கில் பிஸியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான “கஸ்டடி” திரைப்படத்தில் நடித்திருந்தார். 19 வயதான நடிகை கீர்த்தி ஷெட்டி இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்க கூடிய இவர், பல படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். சமீபத்தில்கூட தனக்கு நடிகை திரிஷாவை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.

கடுப்பான கீர்த்தி

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர், “இதுபோன்ற விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள உள்நோக்கம் புரியவில்லை. சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் ஏன் எதிர்மறை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? அவர்களின் கோபத்திற்கு என்ன காரணம்?. நடிகர்களின் குடும்பத்தினர் குறித்து சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர். அப்படி செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? சமீபத்தில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை வைத்து என் முகம் ஆரம்பத்தில் இருப்பது போல் இல்லை என்று கூறுகிறார்கள். மேக்கப், சிகை அலங்காரம் உள்ளிட்டவை முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பு தான். மேலும் வயது அதிகரிக்கும் பொழுது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனை புரியாமல் ஏன் கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here