நடிகை திரிஷா நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மிரட்டிய குந்தவை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக் கூடியவர் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதனால் அடுத்து யார் இயக்கத்தில் திரிஷா நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வந்தது. இந்நிலையில் தூங்கா நகரம், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாக போகும் புதிய படத்தில் திரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அடுத்தடுத்து படங்கள்

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகப்போகும் இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷா, தற்போது “தி ரோடு” என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். திரிஷா நடிக்கப்போகும் புதிய படத்தின் கூடுதல் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here