சர்ச்சைப் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பதில் கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சர்ச்சை பேச்சு

சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தை பற்றி கூறிய விஷயம் சர்ச்சையாக மாறியதால் அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கத்தில்; “அண்மையில் ஒரு நேர்காணலின்போது, தெலுங்கு திரை உலகை நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில் எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும், எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதில் அளித்தேன். இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை” எனக் கூறியிருந்தார்.

அவசியம் இல்லை

தன்னிலை விளக்கம் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பதில் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. ய்துகூறித்து ராஷ்மிகா கூறியிருப்பதாவது; “ஹாய் லவ், உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். உங்கள் கருத்துக்களுக்கு பின்னால் உள்ள அர்த்தம் எனக்கு நன்றாக புரிகிறது. அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கருத்துக்கு பின்னால் தவறான காரணங்கள் எதுவும் இல்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும், மரியாதையும் உண்டு. உங்கள் ஃபர்ஹானா படத்திற்கு ஆல் தி பெஸ்ட்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here